அனுமதி பெற்ற 1,585 முஸ்லிம்களுக்கு இந்த முறை மக்காவுக்கான புனித யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹஜ் பிரயாண ஏற்பாட்டு முகவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.