அரசியல்வாதிகளிடம் இருந்து காலதாமதமான மின்சார கட்டணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவரான எம்.எம்.சி பெர்டினாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் மின்சார கட்டணங்கள் தொடர்பில் அவ்வப்போது பிரச்சினைகள் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ இல்லங்களில் அரசியல்வாதிகளின் மின்சாரக் கட்டணங்கள் அரசாங்கத்தினாலோ, சம்பந்தப்பட்ட அமைச்சராலோ அல்லது அமைச்சினாலோ செலுத்தப்படுகின்றன, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமைச்சு நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிடுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறும்போதும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசிப்பிடங்களை ஏற்கும்போதும், அவர்கள் தங்கள் விவரங்களை மாற்ற தவறிவிடுகிறார்கள்.
இதனால் மின் கட்டணங்களில் பாரிய தொகை நிலுவையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.