தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் தொகுதிகள் நாளை (08) முதல் விநியோகிக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி வழமைபோன்று நாளை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 5000 மெட்ரிக் டன் பெட்ரோல் விநியோகிக்கப்படும்.
3500 மெட்ரிக் டன் டீசல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.