நாட்டின் தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையுடன் கூடிய பாதுகாப்பு கொள்கை அவசியமானது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்வேறு வழிகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை மதிப்பிடுவது மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரதான காரணிகளை வழக்கமாக பகுப்பாய்வு செய்வது பொருத்தமானது என அவர் மேலும் தெரிவித்தார்.