இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் மீண்டும் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்திய கடன் திட்டத்தில் அடுத்த டீசல் கப்பல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் நடைமுறையில் இல்லாததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுகிறது.
உடனடி கொள்முதலின் கீழ் எரிபொருளைப் பெறுவதற்கான சில திட்டங்களைச் செயல்படுத்த சப்ளையர் நிறுவனங்கள் முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.