Friday, September 12, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவியிடம் தகாத முறையில் நடந்த இராணுவ சிப்பாய் கைது

மாணவியிடம் தகாத முறையில் நடந்த இராணுவ சிப்பாய் கைது

திரப்பனை பிரதேசத்தில் ஆசிரியர் ஓய்வு அறையில் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

குறித்த சிறுமி தனது தாயுடன் சென்று பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை நிறைவடைந்த பின்னர் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles