வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் மருந்துப்பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அலமாரிக்கு அருகாமையில் இருந்த பிரதான மின்கலத்தில் தீப்பிடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனால் சில மருந்துப் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.