ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 27ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இச்செயற்குழுவின் பணிகளை முடிப்பதற்காக மேலும் மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.