அடுத்த சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை உறுதிப்படுத்தினார்.
இந்திய கடன் எல்லைத் திட்டத்திலான இந்த உரத் தொகுதி நாட்டிற்கு கிடைக்கப்பெறும் தினத்திலிருந்து 20 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.