நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் நேற்று (31) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், அவர் தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.