மாதாந்தம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒவ்வொரு எரிவாயு சிலிண்டரை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை லிட்ரோ நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இதற்காக மின்கட்டண பட்டியலை பயன்படுத்தி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் எரிவாயு சிலிண்டரை வழங்கும் நடைமுறை அமுலாக்கப்படவுள்ளது.
சில இடங்களில் இந்த நடைமுறை அமுலில் இருக்கின்றது.
இதனை நாடு முழுவதும் கண்டிப்பான நடைமுறையாக கொண்டுவருவது குறித்து லிட்ரோ நிறுவனம் அவதானம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.