தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி, பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் (பராமரிப்பு) மற்றும் விமானப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்த விமான நிலையங்களைத் தொடர்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இரண்டு விமான நிலையங்களின் ஊழியர்களின் பராமரிப்புக்கும் அதிகளவில் செலவிடப்படுவதாகவும், மத்தள விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் சொகுசு பஸ் ஒன்று கட்டுநாயக்காவில் இருந்து மத்தளைக்கு தினமும் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.