விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனுவை பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை இன்று (11) பிறப்பித்துள்ளது.
மிரிஹான பகுதியிலுள்ள வீடொன்றில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
