முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான நீண்டகால வதிவிட விசா திட்டமான ‘கோல்டன் பெரடைஸ் விசா’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் தலைமையில் இது அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த விசா மூலம் இலங்கையில் முதலீடு செய்ய, வசிக்க மற்றும் கல்வி கற்க முடியும்.
இந்நிகழ்வின் போது கோல்டன் பெரடைஸ் விசா திட்டத்திற்கான இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிஸ்சந்திர உட்பட அவரது ஊழியர்களை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்.

