Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்

பயணிகள் போக்குவரத்துக்காக இணைத்துக் கொள்ளப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளுக்காக அரச பேருந்துகள் ஈடுபடுத்தப்படுகின்றமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கடமைகளுக்காக 1,600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சொந்த கிராமங்களை நோக்கிச் செல்பவர்களுக்கான பேருந்து சேவைகள் உரிய வகையில் இடம்பெறவில்லை எனப் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Keep exploring...

Related Articles