லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 200 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
லெபனானில் பல்வேறு பகுதிகளிலும் பேஜர்ஸ் கருவிகள் வெடித்திருப்பதால் பலர் காயமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.