Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை

தேர்தல் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு இன்று (18) நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles