தனமல்வில, குடுஓயா, அட்டாலிவெவ, தோரஆர பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்தப் பகுதியில் உள்ள சிறிய ஏரிக்கு அருகில் விறகு வெட்டுவதற்காக குறித்த பெண் சென்றுள்ளார்.
இதன்போது பழைய மரம் ஒன்று அவர் தலையில் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.