Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் 7 வயது சிறுமி பலி

வாகன விபத்தில் 7 வயது சிறுமி பலி

மாரகஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்று பௌசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 7 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பயணித்துள்ளதாகவும் திடீரென முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறுமியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக ரம்பேவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதவச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles