Thursday, April 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், அதன் எண்ணிக்கை 218,350 ஆகும்.

மேலும், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles