Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு

வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு

வவுனியா, தாடிக்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த நிலம் ஒன்றில் வெடிக்காத மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் உரிமையாளர் நேற்று (10) காணியை சுத்திகரித்த போது அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததாக காணியின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணியின் உரிமையாளரால் வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸாரர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது அது மோட்டார் குண்டு என்பது தெரியவந்துள்ளது.

பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டை அங்கிருந்து அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles