ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகினால் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
அவ்வாறான சூழ்நிலையில், பசில் ராஜபக்ஷவின் மொட்டு கட்சியிலேயே அதிக உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
எனவே பசில் ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.