ஹெரோயின் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெதிகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
15 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்தமை மற்றும் கடத்திய குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் 2018 ஆம் ஆண்டு தெதிகம பாடசாலைக்கு அருகில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு மரணதண்டனை விதிப்பது தொடர்பில் நீதிவான் ஏதும் கூறியுள்ளாரா என வினவியபோதுஇ தாம் 8 வயது குழந்தையை பராமரித்து வருவதாகவும்இ தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தமக்காக ஆஜரான சட்டத்தரணி உரிய முறையில் பதிலளிக்கவில்லை எனவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். .