Saturday, May 24, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்ஜோர்ஜியாவில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய மாணவனின் தந்தை கைது

ஜோர்ஜியாவில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய மாணவனின் தந்தை கைது

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயதுடைய குறித்த மாணவன் தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது தந்தையிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள பாடசாலையில் நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மகனிடம் ஆயுதம் இருந்ததை கைதான தந்தை அறிந்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles