Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்பாகிஸ்தானில் தாக்குதல்: 23 பேர் பலி

பாகிஸ்தானில் தாக்குதல்: 23 பேர் பலி

பாகிஸ்தானின் பலுகிஸ்தான் பகுதியில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் பஞ்சாபிற்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிட்டபோது, அதில் பஞ்சாபைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 3 பேர் பலுகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சுமார் 10 லொறிகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அவற்றின் சாரதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles