20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எக்காரணம் கொண்டும் அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.