Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

காலியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

காலி சீமெந்து தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள ஏரியில் மிதந்துக் கொண்டிருந்த சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (22) காலை ருமஸ்ஸல சீமெந்து தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள ஏரியில் சடலமமொன்று மிதப்பதாக தகவல் கிடைத்ததாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 30 வயதுடைய காலி, நாகியாதெனிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles