பாகிஸ்தானில் இருந்து யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானின் யாசாத் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 23 பயணிகள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் 14 பேர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.