கொழும்பு கோட்டை வரை இயங்கும் அலுவலக ரயில்களில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளம் ரயில் பாதையில் சிலாபத்துக்கும் பங்கதெனியவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று (21) காலை பெய்த மழை காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.