Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் மரணம்

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் மரணம்

பேலியகொட, நாரம்மினிய பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று (19) உயிரிழந்துள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களனி நாரம்மணிய வீதியில் வசிக்கும் 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய கொட்டுகச்சய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles