திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பேருந்து – லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், லொறியொன்றும் மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு பின்னால் லொறி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.