எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதற்கான உடன்படிக்கை நாளை (14) தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் கைச்சாத்திடப்படவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.