Monday, June 16, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு9 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 34 வயது நபர்

9 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 34 வயது நபர்

யாழ்ப்பாணத்தின் நெல்லியடி, துன்னாலை பகுதியில் 34 வயது திருமணமான நபர் ஒருவர், 9 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கணவன்-மனைவியாக வாழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சிறுமி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனதால், சிறுமியின் பெற்றோர் இது குறித்து நெல்லியடி பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

குறித்த சிறுமியுடன் சந்தேகநபர் இருக்கும் இடம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த நெல்லியடி பொலிஸார் அவரை நேற்று (01) கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை ஒகஸ்ட் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, அது தொடர்பான அறிக்கையை ஒகஸ்ட் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles