Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் தடை இல்லை

தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் தடை இல்லை

தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு தேவையான ஆதரவு பொலிஸாரால் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பிரதி தேர்தல்கள் மா அதிபர் மற்றும் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பொலிஸ் அதிகாரிகளை வழங்க பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று (31) இணங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles