Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு25 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

25 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.407 ஏர் ஏசியா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குறித்த நபர் சில பயணப்பொதிகளை அனுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த நபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணப் பொதிகளை எடுத்துச் செல்ல வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பயணப்பொதிகளை ஆய்வு செய்தபோது, ​​அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 245 இலத்திரனியல் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles