தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் இன்று (30) காலை நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பிலான பல விடயங்கள் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இன்றைய கலந்துரையாடலில் வேட்புமனு கையளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பை ஈடுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.