Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆகஸ்ட் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

ஆகஸ்ட் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

வாகன இறக்குமதிக்கு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்குள் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக வர்த்தக நடவடிக்கைகளுக்கும் போக்குவரத்திற்கும் தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் எனவும், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles