Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் விலையை காட்சிப்படுத்தாதோருக்கு எதிராக நடவடிக்கை

பாண் விலையை காட்சிப்படுத்தாதோருக்கு எதிராக நடவடிக்கை

450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்ப்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் டி.ஐ.உடுவர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles