பயாகல கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் பெண் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பயாகல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
60-70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.