போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு விகிதத்துக்கு ஏற்ப கலந்துரையாடி இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த கட்டணத்தை திருத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
அதற்கமைய, பேருந்து பயண கட்டணங்கள் 25 முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.