Wednesday, June 18, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வர் கைது

புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வர் கைது

புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (16) ஹொரோவ்பதான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புதையல் தோண்டும் போது கைது செய்யப்பட்ட பிக்கு அம்பலாங்கொட மத்திட்டிய பிரிவெனாவை சேர்ந்தவர் எனவும், ஏனைய சந்தேகநபர்கள் ஹொரோவ்பதான, மொரவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் 23 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரோவ்பதான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் காணிக்கைகளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles