Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய்

மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, இந்த வருடம் 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அந்த காலப்பகுதியில் 12 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 30,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கை 6,965 ஆகும்.

கம்பஹா மாவட்டத்தில் 3,126 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,998 பேரும், கண்டி மாவட்டத்தில் 2,441 பேரும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 21 சுகாதார வைத்திய அதிகாரி அதிகார வரம்புகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles