தபால் ஊழியர்கள் இன்று (9) இரண்டாவது நாளாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் 90% தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 4,700 க்கும் மேற்பட்ட தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் கடமையாற்றும் 20,000 இற்கும் அதிகமான தபால் ஊழியர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்குபற்றவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு, பணி நிரந்தரம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.