95 ஒக்டேன் பெற்றோல் பயன்படுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை வெளியிட்டுள்ளார்.
இதன்படி 95 ஒக்டேனை பயன்படுத்துகின்றவர்கள் 92 ஒக்டேனை பெற்றுக் கொள்ள வரிசையில் நிற்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்ட 95 ஒக்டேன் பெற்றோல் இன்று முதல் நாடு முழுவதும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
நாளை (24) முதல் அதனை மக்கள் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.