வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பானிஸ் கடே சந்தி பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் சேவை மற்றும் பழுதுபார்க்கும் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பல மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (05) அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் பழுதுபார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட பெறுமதியான பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கு சொந்தமான பல உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் இந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கு யாரோ ஒருவர் தீ வைத்திருக்கலாம் என மோட்டார் சைக்கிள் ஒன்றின் உரிமையாளர் வாத்துவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் நபர் அப்பகுதியில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் இடத்தில் வேலை பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு இந்த மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் இடத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.