முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் 16 நிலையான வைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, கெஹெலியவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோருக்கு சொந்தமான 16 நிலையான வைப்புக்கள் மற்றும் 03 காப்புறுதிகளை தடை செய்ய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த கணக்குகள் அனைத்தும் 07 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கணக்குகளின் பெறுமதி சுமார் 93.12 மில்லியன் ரூபாவாகும்.
சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இந்தப் பணத்தை சம்பாதித்திருக்கலாம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சந்தேகித்துள்ளது.