யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு கிலோ உள்ளூர் சுப்பர் நாட்டு அரிசியை ஒரு ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலில் இருந்து மக்களை மீட்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாண மக்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, யாழில் ஒரு கிலோ நாட்டு அரிசியை ஒரு ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.