Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்உயிரை மாய்த்துக் கொண்ட ரொபோ

உயிரை மாய்த்துக் கொண்ட ரொபோ

தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரொபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில்இ தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரொபோ இது என தெரிவிக்கப்படுகின்றது.

தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக குறித்த ரொபோ பணியாற்றி வந்துள்ளது.

ஆவணங்களை எடுத்துச் செல்லும் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய ரோபோ, தான் பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட ரொபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்த ரொபோவை நகர அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான விரிவான விசாரணைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles