இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தமது நாட்டு பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
மீண்டும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்பியா, கொங்கோ, ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மோனியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.