நாட்டில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய 300 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் உயிர் காக்கக்கூடிய 25 வகையான மருந்து பொருட்கள் நாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
புற்றுநோய்க்கான மருந்து மற்றும் ஊசி மருந்து, நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் இன்சுலின், இருதய கோளாறுக்காக அவசரமாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் என்பன முற்றாக அற்றுப் போயுள்ளன.
அவை அரச வைத்தியசாலைகளிலோ அல்லது தனியார் மருந்தகங்களிலோ எங்கும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.